Saturday, August 2, 2014

தமிழ் இறையியல் மன்றம் ஆண்டுக் கூட்டம் 2014 திருச்சிராப்பள்ளி ஜுலை 9 10

 தமிழ் இறையியல் மன்றம்,
29ம் ஆண்டுக் கூட்டம்
பொதுநிலையினர் பயிற்சி மையம்,
பிராட்டியூர் திருச்சி ஜூலை 9,10 2014
தமிழகத் திருஅவையில் தலைமைத்துவம்.
09.07.2014 புதன்
வருகைப் பதிவு- திருமிகு பொன் லாரன்ஸ் மன்றப் பொருளர்
இறை வேண்டல்- தூய பவுல் இறையியல் கல்லூரி,
     திருச்சிராப் பள்ளி  மாணவர்
வரவேற்புரை- திருமிகு தெரசாமேரி, மன்றத் துணைத் தலைவர்
வாழ்த்துரை- அருள் பணி முனைவர் செபாஸ்டியன்,
தலைவர் தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப் பள்ளி
அறிமுகம்: பேரருள் திரு முனைவர் ச தே செல்வராஜ்
            குருகுல முதல்வர், தூத்துக்குடி மறைமாவட்டம்


அருள் பணி முனைவர் மரிய அருள்ராசா சே ச அருட்கடல், இயேசு சபை இறையியல் கல்லூரி, சென்னை அவர்கள் இன்றையத் தமிழகத் திருஅவையில் தலைமைத்துவம்- ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடக்க உரை நிகழ்த்தினார்.


அமர்வு 1 ல் அருள் பணி முனைவர் செபாஸ்டியன், தலைவர் தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப் பள்ளி அவர்கள் நெறிப்படுத்த திரு மிகு முனைவர் ஜான்போஸ்கோ, தலைவர் இந்திய கிறித்துவ மறுமலர்ச்சி இயக்கம், தமிழ் நாடு அவர்கள் தலைமைத்துவம்  பழைய புதிய புரிதலும் சிந்தனையும் என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்த்தினார்.


அமர்வு 2 ல் அருள் பணி முனைவர் சந்தியாகு ராசா, பேராசிரியர், தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப் பள்ளி அவர்கள் நெறிப்படுத்த அருள் பணி முனைவர் தேவராஜ் , செயலர் தமிழகப் பொது நிலையினர் பணிக்குழு, திருச்சிராப் பள்ளி, அவர்கள் திருமுழுக்கு தரும் தலைமைத்துவ உரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் அருள் பணி முனைவர் தெ அல்போன்ஸ், இயக்குநர்  முப்பணி நிலையம், திண்டிவனம் அவர்கள் நெறிப்படுத்த திருமிகு தனசீலி, அருள் பணி ஜேக்கப் க ச, சங்கமம் இயற்கை மருத்துவம், பெருகமணி, திருச்சி, திருமிகு தா சே ஞானராஜ், சென்னை ஆகியோர் தலைமைத்துவம்  மகளிர் பார்வை, துறவியர் பார்வை, பொது நிலையினர் பார்வை ஆகிய தலைப்புகளில்   தங்கள் அனுவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.



10.07.2014 வியாழன்
மறுநாள் காலையில் முதல்நாள் நடைபெற்ற அமர்வுகளின் தொகுப்பை திருமிகு ஆக்னஸ் குளோரி மன்றத் துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் நடைபெற்ற இறையிலாக்கத்தில் அருள் பணி முனைவர் நசரேன், பங்குப் பணியாளர், கன்னியாகுமரி அவர்கள் நெறிப்படுத்த அருள் பணி முனைவர் ஜேம்ஸ் விக்டர், பங்குப் பணியாளர், கூடுதாழை, அவர்கள் திருச்சபையில் தலைமைத்துவம் என்ற தலைப்பில் இறையிலாக்கம் செய்தார்.
பின்   அருள் பணி முனைவர் ஜேம்ஸ் விக்டர், மன்றத் தலைவர் நன்றி தெரிவித்தார். நிறைவாக மன்றப் பொதுக்குழு கூட்டம் அருள் பணி முனைவர் ஜேம்ஸ் விக்டர் தலைமையில் நடந்தது.
மதிய உணவோடு தமிழ் இறையியல் மன்றத்தின்  29ம் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது.

தமிழ் இறையியல் மன்றத்தின் 29ம் ஆண்டுக் கூட்டம் திருச்சி பிராட்டியூரில் உள்ள பொது நிலையினர் உருவாக்க மையத்தில் " தமிழகத் திருஅவையில் தலைமைத்துவம்" என்ற தலைப்பில் ஜூலை 9 புதன் 10 வியாழன் அன்று நடந்தேறியது. 



No comments:

Post a Comment